states

img

திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஎம் தீவிரப் பிரச்சாரம்....

ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 17 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நெல்லூர் யாதகிரி போட்டியிடுகிறார். நெல்லூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதி உட்பட ஏழு தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பதி தொகுதியில் மதவெறி பாஜகவை வீழ்த்துவோம் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி களம் காண்கிறது. 

தொகுதி முழுவதும் வேட்பாளர் யாதகிரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வி.சீனிவாசராவ், மாநில செயலாளர் பி.மது உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

;